12 November 2014

இந்தியாவின் சிறப்புகள்

மவ்லவி ஹனீப் ஜமாலி

وَقُلْنَا اهْبِطُوا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ وَلَكُمْ فِي الْأَرْضِ مُسْتَقَرٌّ وَمَتَاعٌ إِلَى حِينٍ ( 2:36
(ஆகவே) நாம், 'நீங்கள் (இங்கிருந்து) கீழிறங்கிச் சென்றுவிடுங்கள்¢ உங்கிளில் சிலர் சிலருக்குப் பகைவர்களாக இருப்பீர்கள். ஒரு (குறிப்பிட்ட) காலம்வரை உங்களுக்கு பூமியில் வசிப்பிடமும் (அனுபவிக்க) வாழ்வாதாரமும் உண்டு' என்று கூறினோம். (அல்குர்ஆன் 2:36) 

عن ابن عباس رضى الله عنه: ان اول ما اهبط آدم (عليه السلام) الى ارض الهند. (مستدك حاكم)

இப்னு அப்பாஸ் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஆதம் (அலை) அவர்கள் (சுவர்க்கத்திலிருந்து) முதலாவதாக இந்திய பூமியில்தான் இறங்கினார்கள்.' (நூல்: முஸ்தத்ரக் ஹாகிம்) 

இந்தியாவில் இறங்கிய ஆதம் (அலை)
ونزل آدم (عليه السلام) على جبل من جبال الهند. (الهداية الى بلوغ النهاية) اهبط آدم (عليه السلام) بالهند وحواء (عليها السلام) بجدة. (ابن عساكر) لما نزل آدم (عليه السلام) بسرنديب من الهند. (تفسير بحر المحيط) 
'ஆதம் (அலை) அவர்கள் இந்திய மலைகளில் ஒரு மலையின் மீது (சுவர்க்த்திலிருந்து முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: அல்ஹிதாயா இலா புலூகின் நிஹாயா) 'அதம் (அலை) அவர்கள் இந்தியாவிலும்¢ ஹவ்வா (அலை) அவர்கள் ஜிந்தாவிலும் (முதலாவதாக) இறங்கினார்கள்.' (நூல்: இப்னு அஸாகிர்) 'ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவின் 'ஸரன்தீப்' என்ற பகுதியில் இறங்கினார்கள்.' (நூல்: தஃப்ஸீர் பஹ்ருல் முஹீத்) உலக ஆரம்பத்தில் நாடுகள் கிடையாது. எனவே ஆதம் (அலை) அவர்கள் இறங்கிய பகுதி இந்தியாவாகும். இந்தியவிலிருந்து இலங்கையை தனி நாடாக பிறிக்கப்பட்ட பிறகு இன்று அப்பகுதி இலங்கை நாட்டிற்க்குள் சென்றுவிட்டது. 

இந்தியாவின் நறுமணம்
عن على رضى الله عنه: اطيب ريح الارض الهندஇ اهبط بها آدم (عليه السلام) فعلق ريحها من شجر الجنة. (تفسير در المنثور)
 அலி (ரளி) அவர்கள் அறவிக்கிறார்கள்: 'இந்தயாவின் (தவ்ஹீது) நறுமணத்தை நான் நுகர்கிறேன். அந்த நறுமணத்தை சுவர்க்க மரத்திலிருந்து ஆதம் அலை அவர்கள் கொண்டுவந்தார்கள்.' (நுல்: தஃப்ஸீர் துர்ருல் மன்ஸூர்) 

இந்தியாவில் ஈமான் பரவல்
وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنْصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنْذِرِينَ (46:29)
'மேலும், (நபியே!) இந்தக் குர்ஆனைச் செவியேற்பதற்காக, ஜின்களிலிருந்து ஒரு சிலரை உம்மிடம் நாம் திருப்பியதை (நீர் நினைவு கூர்வீராக!) அவர்கள் அங்கு வருகை தந்து (சிலர் சிலரை நோக்கி, அமைதியாயிருங்கள் என்று கூறினர். பின்னர், அது (ஓதி) முடிக்கப்பட்ட போது, தங்கள் கூட்டத்தாரிடம் அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகத் திரும்பிச் சென்றனர்.' (அல்குர்ஆன் 46:29

இந்தியர் ஸவாத் பின் காரப் (ரளி) இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி
عن البراء رضي الله عنه قال: بينما عمر بن الخطاب يخطب الناس على منبر رسول الله صلى الله عليه وسلم، إذ قال: أيها الناس، أفيكم سواد بن قارب؟ قال: فلم يجبه أحد تلك السنة، فلما كانت السنة المقبلة قال: أيها الناس، أفيكم سواد بن قارب؟ قال: فقلت: يا أمير المؤمنين، وما سواد بن قارب؟ قال: فقال له عمر: إن سواد بن قارب كان بَدءُ إسلامه شيئا عجيبا، قال: فبينا نحن كذلك إذ طلع سواد بن قارب، قال: فقال له عمر: يا سواد حدثنا ببدء إسلامك، كيف كان؟ قال سواد: فإني كنت نازلا بالهند، وكان لي رَئِيّ من الجن، قال: فبينا أنا ذات ليلة نائم، إذ جاءني في منامي ذلك. قال: قم فافهم واعقل إن كنت تعقل، ... وقال: يا سواد بن قارب، إن الله بعث نبيًا فانهض إليه تهتد وترشد.... قال: فلما سمعته تكرر ليلة بعد ليلة، وقع في قلبي حب الإسلام من أمر رسول الله صلى الله عليه وسلم ما شاء الله، قال: فانطلقت إلى رحلي فشددته على راحلتي، فما حللت عليه نسعة ولا عقدت أخرى حتى أتيت رسول الله صلى الله عليه وسلم، فإذا هو بالمدينة -يعني مكة-والناس عليه كعرف الفرس، فلما رآني النبي صلى الله عليه وسلم قال: 'مرحبا بك يا سواد بن قارب، قد علمنا ما جاء بك'. قال: فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجذه، وقال لي: 'أفلحت يا سواد': فقال له عمر: هل يأتيك رئيك الآن؟ فقال: منذ قرأت القرآن لم يأتني، ونعم العوض كتاب الله من الجن  (دلائل النبوة للبيهقي 1:248)

பர்ரா (ரளி) அவர்கள் அறவிக்கிறார்கள்: 'உமர் (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மிம்பரில் (குத்பா) பிரசங்கம் செய்துக்கொண்டிருந்தார்கள். (அந்த குத்பாவில்) மனிதர்களே! உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். (அந்த ஆண்டு முழுவதும்) ஒருவரும் (நான் தான் என்று) கூறவில்லை. அடுத்த ஆண்டும் (குத்பாவில்) மனிதர்களே! உங்களில் 'ஸவாத் பின் காரப்' உள்ளாரா? என்று கேட்டார்கள். (அப்போது) பர்ராவாகிய நான் அமீரல் முஃமினீன் அவர்களே! யார் அந்த ஸவாத் பின் காரப்? என்று கேட்டேன். அதற்கவர்கள் 'ஸவாத் பின் காரப்' என்பவர் இஸ்லாத்தை ஏற்ற செய்தி மிக ஆச்சரியமானதாகும் எனக்கூறினார்கள். அந்த நேரத்தில் 'ஸவாத் பின் காரப்' (ரளி) அவர்கள் நான் அவர் என முன்வந்தார்கள். அப்போது உமர் (ரளி) அவர்கள் ஸவாத் அவர்களே! நீங்கள் இஸ்லாத்தில் இணைந்ததைப் பற்றி கூறுங்களேன் என்றார்கள், அதற்கு ஸவாத் அவர்கள் கூறளானார்கள். 'நான் இந்தியாவைச் சார்ந்தவர். எனக்கு யோசனை சொல்லக்கூடிய ஒரு ஜின், பல இரவுகள் என் கனவில் தோன்றி ஸவாதே! அல்லாஹ் ஒரு நபியை அனுப்பியிறுக்கிறான்.  சென்று அவரைச் சந்தித்து ஹிதாயத்தைப் பெற்று நேர்வழி அடைவீராக என்று எடுத்துக்கூறிக்கொண்டே இருந்தது. அதனால் என் உள்ளத்தில் இஸ்லாத்தின் மீது பிறியம் ஏற்பட்டுவிட்டது. உடனே மக்கா நோக்கி நான் பயணமானேன். அங்கே சென்றால் மக்கள் நபி (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்திருந்தார்கள்.' என்னை பார்த்த நபியவர்கள் 'ஸவாதே! உங்கள் வரவு நல்வரவாகட்டும்! உம்மை இங்கு யார் கொண்டு வந்தது என்பதை நாம் அறிவோம் என்றார்கள்.' மேலும் ஸவாத் கூறுகிறார். நபியவர்கள் கடவாய்ப் பற்கள் தெறியும் அளவுக்கு (சந்தோஷத்தில்) சிரித்துக்கொண்டே ஸவாதே வெற்றி பெற்றுவிட்டிர் எனக்கூறினார்கள் (அப்போது) உமர் (ரளி) அவர்கள், இப்போதும் அந்த ஜின் (ஸவாதே!) உம்மிடம் வருகிறதா? எனக்கேட்டார்கள். அதற்கு ஸவாத் அவர்கள், நான் குர்ஆன் ஓத ஆரம்பித்த பிறகு அது வருவதில்லை¢ அல்லாஹ்வின் வேதம் ஜின்னைவிட்டும் எனக்கு தேவையற்றதாக்கிவிட்டது எனக்கூறினார்கள்.' (நூல்: தாலாயிலுன் நுபுவத் 1:248) 

இந்தியாவின் மருத்துவ ஊது கட்டை
عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ قَالَتْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: عَلَيْكُمْ بِهَذَا الْعُودِ الْهِنْدِيِّ فَإِنَّ فِيهِ سَبْعَةَ أَشْفِيَةٍ (رواه البخارى – 5692)
உம்மு கைஸ் பின்தி மிஹ்ஸன் (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் இந்த இந்திய (கோஷ்ட)க் குச்சியை அவசியம் பயன்படுத்துங்கள். ஏனெனில், அதில் ஏழு நிவாரணங்கள் உள்ளன என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.' (நூல்: புகாரி – 5692) 

நறுமணப் பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு வகை மரமே (ஊது) கோஷ்டம் அல்லது கோட்டம் (ஊழளவரள சுழழவ) என்பது. இம்மரம் இமய மலையின் வடமேற்கு நாடுகளில் பயிராகிறது. இது இரு வகைப்படும். 1. இந்தியக் கோஷ்டம் (செய் கோஷ்டம்). இது கறுப்பாகவும் அதிக வெப்பமுள்ளதாகவும் இருக்கும். 2. கடல் கோஷ்டம் (வெண்கோஷ்டம்). இது வெண்மையானதாக இருக்கும். இதன் குச்சியில் நெருப்பிட்டு வாசனைப் புகை பிடிக்கலாம். இதை ஊறவைத்து அதன் சாற்றைத் தண்ணீர் அல்லது தேனுடன் குடிக்கலாம். இதைத் தேய்த்து பத்துப் போடவும் செய்யலாம். இதைப் பொடியாக்கி அதன் தூளைப் பயன்படுத்தவதும் உண்டு. கோஷ்டத்தால் அநேக மருத்துவப் பலன்கள் உள்ளன. இந்த ஹதீஸில் கோஷ்டத்தில் ஏழு வகை நிவாரணங்கள் உள்ளதாக நபி (ஸல்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். தொண்டை வலிக்கும், மார்புச் சதை வாதத்தால் ஏற்படும் விலா வலிக்கும் (Pடநரசழனலnயை) கோஷ்டம் நிவாரணியாகும். 

மாதவிடாய் போக்கையும் சிறுநீர் ஓட்டத்தையும் கோஷ்டம் சீராக்கும். குடற்புழுக்களைக் கொல்லும், விட்டுவிட்டு வரும் காய்ச்சல் (ஞரயசவயn குநஎநச), தோலைச் சிவக்க வைக்கும் கடுமையான காய்ச்சல் (சுழளந குநஎநச) ஆகியவற்றுக்கும் கோஷ்டம் சிறந்த நிவாரணியாகும். இரப்பையைச் சூடாக்கிச் சீர்படுத்தும், முகப்பரு மற்றும் தேமலைப் போக்கும். (நூல்: ஃபத்ஹுல் பாரி) கோஷ்ட வேரை மென்றாலோ, காய்ச்சி வாய் கொப்பளித்தாலோ, வாய் நாற்றம் அகலும். நீருடன் கலந்து அதை அருந்தினால் நுரையீரல் வலி, விலா வலி, குடற்புண் ஆகியவற்றுக்கு நல்லது. 5 கிராம் அளவு கோஷ்ட வேரைச் சாப்பிட்டால் இரைப்பை அழற்சிக்கு நிவாரணம் கிடைக்கும். (நூல்: உம்ததுல் காரீ)

இந்தியாவிலிருந்து 40 வருடம் ஹஜ்ஜுக்கு சென்ற ஆதம் (அலை)
فحج آدم (عليه السلام) من الهند اربعين سنة. (شعب الايمان) 
'ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலிருந்து நாற்பது வருடம் (40) ஹஜ் செய்தார்கள்.' (ஷுஃபுல் ஈமான்)

இந்தியாவில் மரணித்த சுலைமான் (அலை) கூட்டத்தார்
عن خيثمة قال: دخل ملك الموت سليمان  فجعل ينظر الى رجل من جلسائه يديم النظر الله فما خرج قال الرجل: من هذا؟ قال هذا ملك الموت. قال: رأيته نيظر الى كانه يريدنى.... فدعا الريح فحمله عليها فالقته فى الهند.... امرت ان اقبضه بالهند وهو عندك. (مصنف ابن ابى شيبة) 
கைஸமா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸுலைமான் (அலை) அவர்களின் சபையில் மலக்குள் மவ்த் (இஜ்ராயீல் அலை) அவர்கள் நூழைந்தார்கள். அக்கூட்டத்தாரில் அமர்ந்திருக்கக்குடிய ஒருவரை உற்றுப் பார்த்தார்கள். சபை கலைந்த பிறகு அம்மனிதர் (நபி சுலைமானிடம்) யார் அந்த மனிதர்? என்னையை வேண்டும் என்பதைப்போல என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாராரே என்றார். அதற்கு நபியவர்கள் (ஆம்) அவர்தான் மலகுல் மவ்த் (இஜ்ராயீல்) அவார் என்றார்கள். பிறகு சுலைமான் (அலை) அவர்கள் அவரை வேறு இடத்திற்கு கொண்டு செல்லும்படியாக காற்றுக்கு உத்தரவு இட்டார்கள். அது அவரை தூக்கிச் சென்று 'இந்தியாவில்' போட்டுவிட்டது. அப்போது அவர் உம் கூட்டத்தைச் சார்ந்தவராக இருப்பினும் அவரை இந்தியவில் வைத்தே உயிர் வாங்க வேண்டும் என நான் கட்டளையிடப்பட்டுள்ளேன் எனக்கூறி (அவர் உயிரை இந்தியாவில் வைத்து வாங்கி)னார். (முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா)

இந்தியாவில் மதுவை தடை செய்து குரங்கு
عن طاووس: ان رجلا ابتاع خمرا وخلط فيه ماء ثم حمله الى ارض الهند فباعه وجعل الكيس فى السفينة وكان فى السفينة قرد. فاخذ القرد الكيس وصعد على الدقل فجعل يلقى على السفينة درهما وفى البحر درهما حتى على آخره. (مصنف عبد الرزاق)

'தாவூஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு மனிதர் மதுவை வாங்கினார். அதில் தண்ணீரைக் கலந்து பிறகு அதை 'இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்றார்'. (வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணப்)பையை (தான் செல்லும்) கப்பலில் வைத்தார். அந்த கப்பலில் ஒரு குரங்கு இருந்தது. அந்த குரங்கு (பணப்)பையை எடுத்துக்கொண்டு அந்த கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து, கப்பலில் பாதி திர்ஹத்தையும் கடலில் பாதி திர்ஹத்தையும் முழுவதையும் கொட்டிவிட்டது.' (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்)

இந்தியாவிற்கு வந்த அலெக்ஸாண்டர்
ذو القرنين: اسكنر بن فيلبس المقدونى اليونانى.... ثم سافر الى الهند وحارب هناك. (تفسير المنير – للزحيلى)
துல்கர்னைன்: இஸ்கன்தர் பின் ஃபீலபஸில் மன்தூனீயில் யூனானீ என்பவர் இந்தயாவிற்கு பயணம் செய்து அங்கே நடந்த போரில் களந்துக்கொண்டாவர் ஆவார். (தஃப்ஸீருல் முனீர் -ஜஹீலி)

கிரேக்கரான மாவீரர் அலெக்ஸாண்டர் (யுடநஒயனெசந ஆயஉநனழn). இவர் கி.மு. 356 ஆண்டு மாசிடோனியா (மக்தூனியா) பெல்லாவில் பிறந்தார். கி.மு. 323 –ல் பாபிலேனில் (பாபில்) இறந்தார். மாசிடோனியாவை ஆட்சி புரிந்த (கி.மு. 336-323) அலெக்ஸாண்டர் இரண்டாம் ஃபிலிப் உடைய புதல்வராவார். தத்துவ அறிஞரான அரிஸ்டாட்டிலின் மாணவர் இவர். எகிப்தின் அலெக்ஸாண்ட்ரியா (இஸ்கந்தரியா) நகரை உருவாக்கினார். ஃபரோவின் (ஃபிர்அவன்) இரட்டை மணிமுடியைப் பெற்றார் (துல்கர்னைன்). பேரரசராகத் திகழ்நத அலெக்ஸாண்டரின் ஆட்சி, திரேஸிலிருந்து எகிப்துவரையிலும் கிரேஸிலிருந்து சிந்து சமவெளிவரையிலும் விரிவடைந்திருந்தது. இவர் அனத்தோலியா  சிரியா பினீசியா காசா எகிப்து பாக்ட்ரியா மெசொப்பொத்தேமயியா ஆகிய நாடுகளைக் கைப்பற்றியது மட்டுமல்லாமல், தனது பேரரசின் எல்லைகளை 'இந்தியாவின் பஞ்சாப்' வரை நீட்டியிருந்தார்.

நபி (ஸல்) அவர்களுக்கு இந்திய மன்னரின் அன்பளிப்பு
 عن ابى سعيد الخدرى رضى الله عنه قال: اهدى ملك الهند الى رسول الله صلى الله عليه وسلم جرة فيها زنجبيل فاطعمه اصحابه قطعة قطعة واطعمنى منها قطعة. (مستدرك حاكم)
அபூஸயீதுல் குத்ரீ (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'நபி (ஸல்) அவர்களுக்கு 'இந்திய மன்னர்' ஒரு பாத்திரத்தை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார். அதில் இஞ்சி (மரபா) இருந்தது. அதை, நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு சின்ன சின்ன துண்டுகளை உன்ன கொடுத்தார்கள். அதில் ஒரு துண்டை எனக்கும் உன்னக் கொடுத்தார்கள்.' (முஸ்தத்ரக் ஹாகிம்)

இந்தியாவிற்கு அத்தரை இறக்குமதி செய்த ஆதம் (அலை)
عن السدى قال: هبط آدم (عليه السلام) بالهندஇ وانزل معه الحجر الاسوردஇ وانزل معه قبضة من ورق الجنةஇ فنثرها بالهندஇ فنبط شجر الطيبஇ فاصل ما يؤتى من الهند من الورق. (اخبار مكة – للفاكهى)
ஸித்தீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஆதம் (அலை) அவர்கள் (சுவர்க்கத்திலிருந்து) இந்தியாவில் இறங்கினார்கள். அப்போது, தன்னோடு 'ஹஜருல் அஸ்வது' (கருப்புக் கல்)லையும், சுவர்க்கத்தின் இலைகளில் ஒரு பிடியையும் கொண்டுவந்தார்கள். அந்த இலைகளை இந்தியாவில் தூவினார்கள். அதிலிருந்து (அத்தர்) மணமான மரம் முளைத்தது. எனவே இந்தியாவிலுல்ல மனமான (அத்தரின்) அஸல் (சுவர்க்க) இலையாகும்.' (நூல்: அக்பார் மக்கா - இமாம் ஃபாகிஹி) 

இந்திய மர இலைகளில் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
عن حبيب بن وائل: ان رجلا من المطوعة قال: رأيت ببلاد الهند شجرا لها ورد احمر ففيه ببياض محمد رسول الله. (المجالسة وجواهر العلم)
ஹபீப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'மதூhவைச் சார்ந்த ஒரு மனிதர் இந்தியாவில் சில மரங்களில் சிகப்பு இலைகளில் வெள்ளை நிறத்தில் 'முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற (எழுத்தை) நான் கண்டேன் எனக்கூறினார்.' (மஜாலிஸது வஜவாஹிருல் இல்ம்)

இந்திய மர இலைகளில் லாயிலாஹ இல்லால்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்
عن كليب بن وائل: ان رجلا من المطوعة قال: رأيت ببلاد الهند شجرا له ورد احمر ففيه بياض لا اله الا الله محمد رسول الله (المجالسة وجواهر العلم)
குலைப் பின் வாயில் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 'மதூhவைச் சார்ந்த ஒரு மனிதர் இந்தியாவில் சில மரங்களில் சிகப்பு இலைகளில் வெள்ளை நிறத்தில் 'லாயிலாஹ் இல்லல்லாஹூ முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்ற (எழுத்தை) நான் கண்டேன் எனக்கூறினார்.' (மஜாலிஸது வஜவாஹிருல் இல்ம்)

அண்ணலார் இந்தியாவின் வாளைப் போன்றவர்கள்
كعب بن زهير : ان الرسول لسيف يستضاء به ۞ مهند من سيوف الله مسلول. (بانت سعاد-52)

கஃப் பின் ஜுஹைர் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்: 'உறையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் வாட்களுக்கு மத்தியில் - அருமைத் திருத்தூதர் அவர்கள் இருட்டில் ஒளியைப் பாய்ச்சி வழிகாட்டப் பயன்படுத்தப்படும் 'இந்திய திருநாட்டு வாளுக்கு ஒப்பானவர்கள்' ஆவார்கள். (பானத் சுஆத் - 52)

எனவே இவ்வளவு மகத்துவம் வாய்ந்த இந்தியத் திருநாட்டில் அல்லாஹ் நம்மை பிறக்கவைத்ததை நினைத்து சந்தோஷம் அடைவதோடு அவனுக்கு நன்றி கூறுவோமாக! யாஅல்லாஹ்! இவ்வளவு சிறப்புகளை உள்ளடிக்கிய எங்கள் தாய் திருநாடான இந்தியாவை மேலும் செளிப்பான அமைதியான வள்ளரசாக மதச்சார்பற்ற மற்றும் புண்ணிய பூமியாக ஆக்கி வைப்பாயாக! ஆமீன்!!..

0 comments:

Post a Comment